அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 11 arrow மூன்று கவிதைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மூன்று கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - மு.புஷ்பராஜன்  
Thursday, 04 November 2004

1.
சிறு காலப் பூவின் வாசம்

பிரிவதற்காகவோ
பிறந்தவரானோம்...

வாழ்வின் வேருக்காய்
வெவ்வேறு தொலைவுகளில்
நமக்கான காலங்கள்
நினைவுகளாகவே
கரைந்து போயின..

இணைவு கொண்ட
ஈரக் கால மலர்விலும்
பிரிவு கொண்ட
வெம்மைக் கால உலர்வே
அதிகமாக...

ஆயினும்
விலகலின் வெம்மையை மீறி
சிறுகாலப் பூவின் வாசம்
மேவுகிறது
உயிர் வேருக்கான உரமாய்...
07-07-2004
        
                     
2.
சிலர்

சிலர் தமக்கோ
வாய் மட்டும் இருப்பதாயும்
நமக்கோ
காதுகள் மட்டும் இருப்பதாயும்
நம்புகின்றனர்.
நாம் பேச விரும்பினாலும்
விண்ணப்பித்தாலும்
பயனேதுமில்லை.
தமது வாயோ
கட்டளைக்கு மட்டும்தான்
என்ற விதமாக..
10-05-2003

3.  
யார்?

ஏனென்ற கேள்விக்காய்
வாழ்விடம் இழந்து
விரட்டப்பட்ட
முதல் அகதிகள்
ஆதாம் ஏவாளாயின்
அதிகாரத்தால்
இதனை முதலில்
யார் நிகத்தினர்
29-06-2004                                                                    (நன்றியுடன் ஓவியம்:நந்தா கந்தசாமி)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 27 Sep 2023 23:54
TamilNet
HASH(0x558aa8fdde80)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 27 Sep 2023 23:38


புதினம்
Wed, 27 Sep 2023 23:54
















     இதுவரை:  24050825 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2340 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com