அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தியான வெளி…   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Sunday, 19 March 2006

நகரும் வினாடிக்குள்
தொலையும் காலத்தைக்
கணக்கெடுப்பதில்
ஆயுள் கரைகிறது …

முற்றுப் புள்ளியிலிருந்து
ஆரம்பிக்கும்
புது வரிகளைப் போல்
மயானத்திலிருந்து தொடங்குகிறது வாழ்வு …

கரைகளில் மோதும்
அலைகளின் இரைச்சல்
ஆழத்தின் அமைதியை
குலைப்பது போல்

ஆன்ம இசையின்
அழிவில்லா நாதத்தை
மறுக்கும் செவிகளுக்கு
புறங்களின் இரைச்சல்
அற்புதமானதுதான் …

கால்களை இறுகப்பற்றாத
மயானத்து மண்ணில்
எங்களின் உறக்கம்
நிச்சயம் என்பதை
நம்ப மறுக்கும் போதும்

உயர்ந்த மண் குவியல்களைக் கொண்டு
மரண விகிதாசாரம்
கணக்கிடப் படும் போதும்

சிதையில் உடல்களின்
நெஞ்சுக் கூடு
உயரும் போதும்
அற்புதமான இசையை
ஆன்மா
மீட்டிக்கொண்டிருக்கும் …

03ஃ03ஃ2006


     இதுவரை:  24715563 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4278 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com