அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 23 April 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow மகரந்தம் arrow தொலைந்து போனவனின் அறிவிப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தொலைந்து போனவனின் அறிவிப்பு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -சமீர் அல்காசிம்  
Sunday, 27 August 2006

என் கண்களில் சுடரும் மெழுகுவர்த்திகளை
நீ ஊதி அணைக்கலாம்
எனது உதடுகளில் ஜீவிக்கும் முத்தங்களை
உறைந்து போகச் செய்யலாம்
என் சொந்த பூமியின் காற்றை
சாபங்களால் நிறைக்கலாம்                         தீனக்குரலை மடியச் செய்யலாம்
எனது நாணயங்களை
செல்லாததாக்கலாம்
என் குழந்தைகளின் முகங்களில்
புன்னகையை வேரோடு பிடுங்கி
எறியலாம்
ஆயிரம் சுவர்களை எழுப்பலாம்
கண்களில் ஊசி இறக்கி
வேதனையில் துடிக்க வைக்கலாம்
மனித எதிரியே
சமாதானம் இல்லை ஒரு போதும்
இறுதிவரை நான் போராடுவேன்.

எம் கோட்டைகளில் கொடி உயர்ந்து விட்டது
காற்றில் சமிக்ஞைகள் அசைகின்றன
எங்கெங்கும் காண்கிறேன்
அறைகூவியபடி
போராடியபடி
அடிவானத்தில் பாய்மரங்கள் விரிவதை
யூலிஸின் கப்பல்கள்
நாடு திரும்புகின்றன
தொலைதூர கடலில்
எழுகதிர் தோன்றுகிறான்
முன்னேறும்
மனிதனின் பொருட்டு
நான் சபதம் செய்கிறேன்.
மனித எதிரியே
சமாதானம் இல்லை ஒரு போதும்
கடைசிவரை போராடுவேன்
நான் போராடுவேன்.

தமிழில்: சூரியதீபன்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 23 Apr 2024 10:37
TamilNet
HASH(0x55ca237ab6e0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 23 Apr 2024 10:37


புதினம்
Tue, 23 Apr 2024 10:37
















     இதுவரை:  24796350 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2781 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com