அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அணி சேராப் படிமங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - மெலிஞ்சிமுத்தன் -  
Monday, 29 January 2007

வரலாறெங்கிறது ஆளுறவர்களுக்குச் சாதகமா எழுதப் படுகிறதெண்டு ஆச்சி சொன்னாள். அவளே தான் ஏழுமலைகளையும், ஏழுகடல்களையும் தாண்டிப்போய் ஒரு மரப்பொந்தில இருக்கிற கிளியின்ர இறக்கையைக் கிழிச்சா(ல்) மந்திரவாதிகள் சாவானுகள் எண்ட கதையையும் சொன்னாள்.

நான் ஏழுமலைகளையும், ஏழு கடல்களையும் தாண்டினன். இருந்த மரப்பொந்துகளில எல்லாம் தேடினன். ஒரு பொந்திலயும் கிளி இருக்கேல. ஆச்சியெட்ட காட்டுக்கத்தல் கத்திச் சொன்னன்- கிளியில்லயெண எண்டு. அட மோனே நீ வெத்தில வாங்கித்தருவாய் எங்கிறத்துக்காக சும்மா சொன்ன உவகதயெடா எண்டு சொன்னாள் ஆச்சி. ஆச்சி இப்ப ஊர் முழுக்கையும் வெத்திலயால துப்பீற்றுத் திரியிறாளாம். வெத்திலைக்கொரு கதை, புகையிலைக் கொரு கதையெண்டு அவளெட மடிப்பெட்டிக்க நிறையக் கதையள் வச்சிருக்கிறாளாம். கதை கேட்க ஆருங் கிடைக்க மாட்டீனமா வெண்டு தேடியிருப்பாள்.

இருந்து வாற காலத்தில இப்ப நான் கதையெழுதத் தொடங்கீற்றன். ஆச்சியின்ர கதையளில எனக்கு நம்பிக்கயத்துப் போச்சு. என்ர கொப்பி ஒற்றைக்கு மேல ஒரு குருசு போட்டன்.

அடிக்கடி சிலுவ
நித்தம் பூச
கல்லற கிட்ட
கபால மல தூர
சுத்தி வர சம்மனசு
தூரப்போகும் சத்திராதி
யெண்டு ஆச்சி சொல்லித்தந்த செவத்தையும் சொல்லிப்போட்டு ஒரு கத எழுதினன்.

ஒரு ஊரிலயாம் ஒரு ராசாவுக்கும், ராசாத்திக்கும் மூண்டு புள்ளயளாம். மூண்டும் ஆம்பிளப் புள்ளயளாம். மூத்தவனுக்கு பெரிய மீசையாம். ரெண்டாவதுக்கு குடும்பியாம். மூண்டாவதுக்கு குஞ்சுத்தாடியாம். மூத்தவன் வேட்டையாடுறதில காலத்தக் களிக்க, குடும்பியன் அந்தப்புரத்திலேயும் குஞ்சுத்தாடி அடுப்படியிலேயும் படுத்துக் கிடந்தாங்களாம்.

குஞ்சுத்தாடி யோசிப்பானாம் அடுப்புக்கு ஏன் மூண்டு கல்லு வைக்கினம் எண்டு. குடும்பி சொல்லுவானாம் பொம்பிளையள்; கற்பப்பையை தூக்கி எறிய வேணுமெண்டு.

இதயெல்லாம் அரண்மன மதிலுக்கு மேல இருந்து குரங்கொண்டு பார்த்து தலையாட்டிக் கொண்டிருக்குமாம்.

இருந்து வாற காலத்தில, ஒருக்கா அரசன் தன்ர படைகளைக் கூட்டிக் கொண்டு கோயிலுக்கு யாத்திர போன நேரம் பாத்து, பக்கத்து நாட்டரசன் படையெடுத்து இவங்கட நாட்டுக்குள்ள வந்திருவானாம். குடும்பியையும், குஞ்சுத்தாடியையும் குரங்கு தூக்கீற்றுப்போய் காட்டுக்குள்ள வச்சு வளர்க்குமாம். குடும்பியும், குஞ்சுத்தாடியும் வளர் வளரெண்டு வளருவாங்களாம்.

குரங்கு இவங்களுக்கு குத்திகரணம் எல்லாம் அடிச்சுப் பழககுமாம். ரெண்டு பேரும் ஒருநாள் ஆரு பெரிய கரணம் அடிக்கிறதெண்டு போட்டி போட்டிற்று கரணம் அடிச்சாங்களாம். அடிச்ச அடியில ரெண்டு பேரும் வந்து வெளிநாட்டில விழுந்தாங்களாம்.

உன்னாண இந்த ரெண்டுபேரையும் அண்டைக்கு லாச்சப்பல்ல கண்டனான். ரெண்டு பேரும் நிறையக் கிளி வச்சிருக்கிறாங்க. கிளி யோசியமெல்லாம் சொல்லுறாங்களாம். நல்லா கரணமடிக்கிறாங்களாம். அரண்மனையைச் சுத்தி பசாசுகளும், மந்திரவாதிகளுமாம். அரசி தின்னவும் அரிசி இல்லையாம்.

அடிக்கடி சிலுவ நித்தம் பூச, கல்லற கிட்ட கபால மல தூர, சுத்திவர சம்மனசு வர, தூரப்போகட்டும் சத்துராதி.

கதையும் முடிஞ்சுது
கத்தரிக் காயும் காச்சிது.

இந்தக் கதைய எழுதீற்று என்ர மகளுக்கு வாசிச்சுக் காட்டினன். அவள் சொன்னாள்,
காட்டூன் பொம்மை யொண்டு கண்ணீர் விட்டிற்றிருக்கிறதப்போல இருக்குதப்பா உங்களப் பார்த்தாலெண்டு.


 


     இதுவரை:  24716753 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4133 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com