அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 33 arrow பயணமுகவர்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பயணமுகவர்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மா.சித்திவினாயகம்  
Tuesday, 10 April 2007

கொடுமையணிந்து
தினம்.. தினம்…
வருகிறது பெரியவெள்ளி!

சிலுவையின்றிச்
சாகடிக்கப் படுகிறார்கள்
புதுப் புது யேசுக்கள்!

ஓளிபாய்ச்சி
உயிர்த்தெழுந்தது
பேர்லின் பெருந்தெரு.

புரியாத மொழி..
புரியாத ஊர்..
புரியாத மனிதர்கள்..

ஈஸ்டர் தினத்திற்கு
முன்னிரவொன்றில்--நான்
அவனுடன் அந்த
அறையினுள் நுழைந்தேன்.

'பொலிஸ் வந்தால்
புருஸன் என்று
என்னையே சொல்'
மீசை மயிர்கள்
முகத்தில் உரச
நெருங்கி அமர்ந்தான்

அவன் முடிவெடுத்து விட்டான்
மூடிய கதவுக்குள்-எது
நடந்தாலும் வெளியே வராதென..

இனிச் சட்டையைக் கிழிக்கலாம்..
வாரினால் அடிக்கலாம்..
எச்சிலால் துப்பலாம்..
பரிகாசப்படுத்தலாம்..
இயேசுவைப்  போலவே
பாடுகள் படுத்திக்
கொன்றும் போடலாம்

இது பயணமுகவர்கள் காலம்

அதிஸ்டம் தேடி
அதிஸ்டமாய் வந்து
அதிஸ்டம் தொலைக்கிற
சீதைகள்!

முகவர்கள் வெட்டும்
இடுகாட்டுக் குழிகளில்..
 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 11:53
TamilNet
HASH(0x560ec92ce768)
Sri Lanka: English version not available