அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 35 arrow உறவு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உறவு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 25 May 2007

உறவுகள் முதலில் எங்கே அறுகின்றன?
 
மரங்கள் முதலில் எங்கே பட்டுப்போகின்றன?
வேர்களிலா? கிளைகளிலா?
இலைகள் உதிர்வது வேறு விஷயம்!
அவையில்லா மரங்கள் அனைத்தும்
இறந்து போனவை அல்ல!
கிளைகளின்றியும் மரங்கள் வாழமுடியும்!
அடியோடு வெட்டப்பட்ட மரங்கள்கூட
துளிர்த்துக் கிளைப்பது புதினமல்ல!
 
வேர்கள் இறக்கும் போதுதான்
மரமொன்றுக்கு மரணம் நேர்கின்றது!
வேர்கள் வித்தியாசமானவை!
மண்ணிலிருந்து மரத்துக்கு
உணவைக் கொடுப்பது மட்டுமே
வேர்களின் வேலையல்ல!
 
அவை நிமிர்ந்து நிற்பதற்கும்
காரணம் வேர்களேதான்!
 
மரங்களுக்கு வேர்கள்,
மனிதருக்கு உறவுகள்!
 
உறவுகள் முதலில் எங்கே அறுகின்றன?
 
உண்மை அன்பு இல்லாமல்
உள்ளங்கள் வறளும்போது
உறவென்னும் வேர்கள்
அற ஆரம்பிக்கின்றன!
 
இந்த வேர்கள் அறுகின்றபோதுதான்
மனிதன் மரணிக்கத் தொடங்குகின்றான்!
 
உறவுகள் மட்டும் உறுதியாய் இருந்தால்
அவனால் வெட்ட வெட்டத் தழைக்க முடியும்!


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 27 Sep 2023 23:54
TamilNet
HASH(0x558aa8fdde80)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 27 Sep 2023 23:38


புதினம்
Wed, 27 Sep 2023 23:54
















     இதுவரை:  24050866 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2357 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com