எழுதியவர்: ஏ.ஜோய்
|
|
|
Thursday, 06 December 2007
தூங்கி விழித்த முகத்தில் இன்னமும் தூக்கம் எஞ்சியிருக்க முந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி கடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள் என் முன்னால் அலைந்து திரிவதாய் பிரமை..
பல்துலக்கி முகம் கழுவி கண்ணாடி பார்க்கையில் தகாத உறவு வைத்ததாய் கணவனால் நேற்று கொலை செய்யபட்ட பெண்ணின் உருவம் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தது.
அணிந்த ஆடைக்கு பொருத்தமாய் காலுறைகளை மாட்டி சப்பாத்தின் நூல்களை கட்டுகிறேன். ஆவி பறக்க பறக்க மனைவி தயாரித்த தேநீரை அருந்திக்கொண்டு தொலைக்காட்சி பார்க்கிறேன்.
தொலைக்காட்சியில் ஒரு வாரத்திற்கு முன் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உருவம் அழுகிய நிலையில்.. சிறுமியின் கண்கள் என் கண்களை உற்று நோக்குகின்றது. என்னால் என்ன செய்ய முடியும் அவளுக்காக அஞ்சலி செலுத்திவிட்டு வேலைக்கு செல்வதைத் தவிர... 15-10-2007 |